திங்களூரில் இன்று மின் தடை

ஈரோடு, டிச.9:  ஈரோடு மாவட்டம் திங்களூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (9ம் தேதி) நடக்கிறது. அதனால், திங்களூர், கிரே நகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளைம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாயைம், தாண்டாகவுண்டண்பாளையம், மேட்டூர், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி, தாசம்புதூர், நடுவலசு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Related Stories: