தஞ்சை அருகே வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சை, டிச.9: தஞ்சை அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையிலடைத்தனர்.தஞ்சை அருகே வல்லம் பெரியார்நகரை சேர்ந்தவர் அபிமன்னன். இவரது மகன் கபாலி (எ) தமிழரசன் (19). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்.பி.ரவளிப்ரியா காந்தபுனேனி பரிந்துரையின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணங்கள் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் தமிழரசனை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழரசன் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: