அறந்தாங்கி அடுத்த பெருநாவலூரில் அரசு கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அறந்தாங்கி, டிச.8: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்துள்ள பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுக்கோட்டை தனியார் நிறுவனத்தினர் கல்லூரியில் முன்னாள் மாணவ மாணவியருக்கு நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் கண்ணன் பணி நியமன ஆணையை வழங்கினார்.

Related Stories: