ஈரோடு,டிச.6: ஈரோடு அடுத்த காளிங்கராயன்பாளையத்தில் சித்தோடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பட்டதரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரவி(41) என்பவரை போலீசார் கைது செய்து, 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.