மது விற்றவர் கைது

ஈரோடு,டிச.6: ஈரோடு அடுத்த காளிங்கராயன்பாளையத்தில் சித்தோடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பட்டதரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரவி(41) என்பவரை போலீசார் கைது செய்து, 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ஈரோடு சூரம்பட்டி வலசு பவாடி வீதியில் ஓட்டலில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக கடை உரிமையாளரான மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்த சிவராம்(29) என்பவர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: