வேலாயுதம்பாளையம், டிச.5: தவுட்டுபாளையத்தில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 350க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வேலாயுதம்பாளையம் அடுத்த தவுட்டுபாளையத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கரூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் வேலாயுதம்பாளையம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் டாக்டர் கண்ணன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்துகொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.