சிங்கம்புணரி அருகே மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்தில் 3 பேர் கைது

சிங்கம்புணரி, டிச. 5: சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை ஊராட்சி ஓடப்பட்டி கிராமத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் 5 வீடுகள் மீது மண்ணெண்ணெய் குண்டுகளை வீசினர். இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இசம்பவம் தொடர்பாக சிவகங்கை அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த அஜித்குமார் (21), ஜெயபால் (19),  உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்,

Related Stories: