பள்ளிப்பட்டு, டிச.4: ஆர்.கே.பேட்டை அடுத்த கிருஷ்ணாகுப்பம் மேடு கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இல்லம் தேடி கல்வித்திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் பங்கேற்று தொடங்கி வைத்தார். கலைக்குழுவினர் கல்வியின் அவசியம் குறித்தும் கற்றல் பயன்கள் பற்றி கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.