நிலக்கோட்டை குரும்பபட்டியில் பட்டா சிறப்பு முகாம்

வத்தலக்குண்டு, டிச. 4: நிலக்கோட்டை ஒன்றியம் குரும்பபட்டியில் முசுவனூத்து, கூவனுத்து, வீலிநாயக்கன்பட்டி ஊராட்சிகளுக்கு கணினி திருத்த பட்டா சிறப்பு முகாம் நடந்தது.  தாசில்தார் தனுஷ்கோடி தலைமை வகிக்க, துணை தாசில்தார் சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவு, ராஜதுரை, நெடுமாறன், தியாகு, ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரு சின்னு முருகன், தமிழரசன், அன்பழகன் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தீர்வு கண்ட பட்டாக்களை விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் தங்க பாண்டியம்மாள், கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: