ஈரோடு,டிச.4: ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், பங்களாதேஷ், மொரீசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இருப்பின் உடனடியாக அருகிலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாவட்ட ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (வார் ரூம்) 80569-31110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.