வேதாரண்யம், ஏப்.17: வேதாரண்யம் தாலுகா கடினல்வயல் கிராமத்தில் இயங்கி வரும் ஜிஹச்.சி.எல் உப்பு உற்பத்தி நிறுவனத்தில் உப்பளத் தொழிலாளர் களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. உப்பள தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நிறுவன மேலாளர் சுந்தர் தலைமை நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது. இதேபோல், அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பள தொழிலாளர்களுக்கும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.