ஓய்வூதியர்கள் பதிவு செய்யும் பணி ஒத்திவைப்பு

தஞ்சை, ஏப்.16: ஓய்வூதியர்கள் கருவூலத்தில் பதிவு செய்யும் பணி ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாட்டில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2021ஆம் ஆண்டில் கருவூலத்தில் பதிவு செய்யும் பணி ஜூலை மாதத்திற்கு தள்ளி வக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தின் காரணமாக வரும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் இப்பணி நடைபெறும். இதிலும் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் மூத்த வயதுடைய ஓய்வூதியர்கள் நலன்கருதி அரசு அறிவிப்புகள் வெளியானவுடன் தகவல் தெரிவிக்கப்படும் என ஒரத்தநாடு வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: