நாகர்கோவில், ஏப். 16: நாகர்கோவிலில் நேற்று காலை நடுரோட்டில் தொழிலாளி ஒருவர் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் வேப்பமூடு அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் அண்ணா பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றார். யாரும் எதிர்பாராத நிலையில் அவர் நடுரோட்டில் நின்றுக்கொண்டு தனக்குதானே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் பரவிய தீயின் வேதனை தாங்கமுடியாமல் நடுரோட்டில் வாலிபர் அங்கும், இங்குமாக ஓடினர். பின்னர் சாலையில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். உயிருக்கு போராடிய வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.