பாபநாசம், ஏப்.15: பாபநாசம் அருகே நெருங்கி பழகி காதலியை கைவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கோயில்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சுகன்யா (24). பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து விட்டு சென்னை மறைமலை நகரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறார். கபிஸ்தலம் அருகே எருமைப் பட்டியைச் சேர்ந்த முருகராஜன் மகன் விஜய் (25). பி.இ மெக்கானிக் படித்து முடித்துவிட்டு திருச்சி ஒரு கம்பெனியில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்.