அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

ராமநாதபுரம், ஏப்.15: ராமநாதபுரத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் முருகன், ஆலோசகர் மாடசாமி, மாவட்ட அமைப்பாளர் ராமநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேக்கிழார் வரவேற்றார். அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தி தொடர்பாளர் தங்கவேலு தலைமையில் சமத்துவ உறுதி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட பொருளாளர் பாபு பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த விழாவிற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் சேகரன் தலைமை வகித்தார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருவாடானை தொகுதி செயலாளர் பழனிக்குமார், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: