திருவாரூர், ஏப்.14: பழமை வாய்ந்த திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி கிழிந்த நிலையில் காணப்படுவதால் அதனை புதிதாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப் பினர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் ரயில் நிலையம் முன் ரயில்வே துறை சார்பில் நூறு அடி உயரம் கொண்ட பிரமாண்டமான கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசி பறந்தது.