மதுரை, ஏப். 14: மதுரை ெஜய்ஹிந்துபுரம் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (25). இவருடைய மனைவி உமாதேவி (19). மரவேலை பார்த்து வந்த, பாலகிருஷ்ணனுக்கு போதுமான வருமானம் இல்லை. ேமலும் தம்பதி இடையே வந்த சிறு, சிறு பிரச்னைக்கு எல்லாம் பெரும் தகராறாக மாறியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வெளியே படுத்துக்கொண்டார். மனைவி மட்டும் வீட்டினுள் படுத்திருந்தார். நேற்று அதிகாலை பாலகிருஷ்ணன் எழுந்து வீட்டிற்குள் சென்றபோது, மனைவி உமாதேவி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து கதறி அழுத பாலகிருஷ்ணன், வீட்டிலிருந்து கத்தியை எடுத்து, தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். பின்னர், பழங்காநத்தத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் தொழிலாளி, ஒருவருக்கு போன் செய்து, மனைவி தற்கொலை செய்து கொண்டதையும், துக்கம் தாங்காமல் தான் கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.