அறந்தாங்கி ஏப்.14: அறந்தாங்கி அருகே கம்ப்யூட்டர் உபகரணங்கள் தருவதாக கூறி ஆன்லைனில் மோசடி செய்த நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் எடுத்த ஆர் புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா(24). இவர் மீமிசல் பகுதியில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு பொது சேவை மையம் அமைப்பதற்கான கருவிகள் வாங்க டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். அந்தப் பொருளை வாங்குவதற்காக கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் 20ம்தேதி தேதி வரை பல தவணைகளாக ரூ.40, 800 ஐ அப்துல்லா ஆன்லைனில் கட்டியுள்ளார்.