ஜெயங்கொண்டம், ஏப்.14: ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டான் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் உண்டியலை கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்றனர். அதேபோல், கடந்த மாதம் வாரியங்காவல் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விஜயகுமாரி(55) தாலி சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். இந்த இரண்டு சம்பவங்களையும் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஜெயங்கொண்டம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.