கோயில் உண்டியலில் பணம் திருட்டு

ஈரோடு, ஏப். 13:   ஈரோடு சின்னசெங்கோடம்பள்ளத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரியாக கந்தசாமி (60) என்பவர் உள்ளார். இவர் கடந்த 10ம் தேதி இரவு பூஜைகள் முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை வந்த போது, கோயில் உண்டியல் மட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ. 2 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. மற்ற பொருட்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பூசாரி கந்தசாமி ஈரோடு வடக்கு போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதே போல, செங்கோடம்பள்ளம் சக்தி நகரில் உள்ள விநாயகர் கோயிலில் உள்ள உண்டியலையும் திருடர்கள் உடைக்க முயன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: