தஞ்சை, ஏப்.13: தஞ்சை மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலர் சின்னத்துரை தலைமையில், மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் வாசு, பொருளாளர் அபிமன்னன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர் இந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில், தற்போது விவசாய பணிகள் ஏதும் நடைபெறவில்லை. விவசாய தொழிலாளர்களுக்கு வேளாண் பணிகளும் இல்லாததால், கூலியும் இல்லை. மாவட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை கிடைக்கவில்லை.