நாங்குநேரி ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளாக நிற்கும் குடிநீர் குழாய்கள்

நாங்குநேரி, ஏப்.10: நாங்குநேரி ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் குடிநீர் குழாய்களை செயல்படுத்தி குடிநீர் வழங்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். நாங்குநேரி ரயில் நிலையத்தில் உள்ள இரு நடை மேடைகளிலும் கடந்த ஆண்டு புதிய குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டன. அவை தற்போது வரை செயல்படாமலேயே இருந்து வருகின்றன. இதனால் அவ்வழியாக வருவோர் அவற்றை குப்பைத்தொட்டி ஆக்கியுள்ளனர். பல்வேறு ரயில்களில் வரும் வெளியூர் பயணிகள் ரயில் நிற்கும்போது குடிநீர் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட நல்லிகளை நாடுகின்றனர். முறையாக செயல்படாததால் பயணிகளுக்கு குடிநீர் பிடிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் நாங்குநேரி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் குடிநீர் குழாய்களை உடனே செயல்படுத்தி ரயில் வெளியூர் பயணிகளுக்கு குடிநீர் கிடைத்திட வசதி செய்திட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: