நாமக்கல், ஏப். 10: நாமக்கல் பகுதியில், வரி செலுத்தாமல் இயக்கிய 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாமா பிரியா, உமாமகேஸ்வரி ஆகியோர், தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் மட்டும், பல்வேறு இடங்களில் தொடர் தணிக்கை மேற்கொண்டு, பல்வேறு விதிமுறை மீறி இயக்கப்பட்ட 286 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.