மூதாட்டி மாயம்

கரூர், ஏப்.10: கரூர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் மூதாட்டியை காணவில்லை என பேரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கரூர் தாந்தோணிமலை அடுத்துள்ள அப்பிப்பாளையம் பாலத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார்(44). இவர், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 4ம் தேதி முதல் வீட்டில் இருந்த தனது பாட்டி பாப்பாயி (81) என்பவரை காணவில்லை என தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: