சின்னாளப்பட்டி, ஏப். 9: காந்திகிராம கிராமிய பல்கலைக் கழக புதிய துணைவேந்தராக மாதேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்கலை பதிவாளர் சிவக்குமார், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு, மத்திய உயர்கல்வி துறை பரிந்துரைப்படி புதிய துணைவேந்தராக முனைவர் எஸ்.மாதேஸ்வரன் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட துணைவேந்தர் எஸ்.மாதேஸ்வரன் 5 ஆண்டு காலம் துணைவேந்தராக பதவி வகிப்பார் என்று காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பொறுப்பேற்ற மாதேஸ்வரனுக்கு பல்கலைக் கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.