விருதுநகர், ஏப்.8: விருதுநகர் முத்துராமன்பட்டி சங்கரநாராயணன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(41), மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியில் இருக்கிறார். இவருக்கும் மதுரையை சேர்ந்த ஆர்த்தி(38) என்பவருக்கும் 2010ல் திருமணம் நடந்தது. தற்போது சஞ்சய்(10) என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு நகை, பணம், வரதட்சணை பொருட்கள் வழங்கியும், செல்வராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என ஒதுக்கி வைத்தார். விவாகரத்து கோரி விருதுநகர் துணை நீதிமன்றத்தில் 2012ல் செல்வராஜ் தொடர்ந்த வழக்கு முகாந்திரம் இல்லை என தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2017ல் மேல்முறையீடு செய்தார். விவாகரத்திற்கு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையது அல்ல என 2020 டிசம்பரில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.அதன்பின், டிசம்பர் 2020ல் விருதுநகர் டிஎஸ்பி அலுவலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனைவி, மகன் எதிர்காலத்திற்கு ஜீவனாம்சமாக ரூ.50 லட்சம் தருவது அல்லது ரூ.25 லட்சமும் மாதம் ரூ.25 ஆயிரமும் பணம் தருவதாக எழுத்துப்பூர்வமாக செல்வராஜ் ஒப்புதல் அளித்தார்.