உத்திரமேரூர் ஏப். 8: உத்திரமேரூர் அருகே நல்லூர் கிராமத்தில் அக்னி வசந்தவிழா நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா துவங்கப்பட்டது. விழாவின் தொடக்க நாள் முதல் கோயில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் மகாபாரத நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், ஜலக்கிரிடை, வில் வளைப்பு, அல்லி அர்சுணா, அர்ச்சுணன் தபசு, விராடபருவம், கிருஷ்ணன் தூது, அரவான்கள் பலி, கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் முக்கிய நிகழ்வான பீமன் துரியோதனனை வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.