நாமக்கல் மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா

நாமக்கல், ஏப். 8: நாமக்கல் மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: