கோவை,ஏப்.5:கோவை கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளராக குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பேரூர் செட்டிப்பாளையம்,கல்லாபுரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை துவங்கினார். அப்போது அவர் பேசியதாவது: கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. கடந்த ஐந்து வருடமாக எம்.எல்.ஏ-வாக இருந்த எட்டிமடை சண்முகம் அத்தியாவசிய பிரச்னையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து தரவில்லை. கருத்துக்கணிப்பு முடிவுகள்படி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும். அதன்படி, திமுக ஆட்சி அமைந்தவுடன் கிணத்துக்கடவு மேற்குப் பகுதி ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.