மதுரை, ஏப்.4: மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதி, தொகுதிக்குள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்றிரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், நேற்று தொகுதிக்குள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, வாக்காளர்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் எல்லாம் தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். மதுரையில் அண்ணாநகர், தாசில்தார்நகர் பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், ஒவ்வொரு வீடாக சென்றார். மேலும் இங்குள்ள ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதுடன், இப்பகுதி இஸ்லாமியர்களின் வீடுகளுக்கும் சென்று வாக்குகள் சேகரித்தார். மேலும் பிள்ளைமார் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தலைவர்களையும் நேற்று சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.