மன்னார்குடி, ஏப். 4: தமிழக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொது தேர்தல் பார்வையாளர் சந்திர மோகன் பிரசாத் காஷ்யப் மன்னார்குடி தேர்தல் நடத் தும் அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொணடார்.மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி தொகுதிகளில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை கண்கானிக்க பொது தேர்தல் பார்வையாளராக சந்திர மோகன் பிரசாத் காஷ்யப் என்ற அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவர் மேற்கண்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் நடை பெற்று வரும் தேர்தல் பணிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கண்கானிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பொது தேர்தல் பார்வையாளர் சந்திர மோகன் பிரசாத் காஷ் யப் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலு வலகத் திற்கு நேரில் வந்து திடிரென ஆய்வு மேற்கொண்டார்.