முத்துப்பேட்டை, ஏப்.4: முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சுகாதார துறை இணைந்து தன்னார்வலர்கள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் நிர்மலாதேவி பேசுகையில்,சட்டமன்ற தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது, இளம் வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய கடமை தவறாது 100 சதவீதம் வாக்களிப்பது, வீட்டில் உள்ள அனைவரையும் வாக்களிக்க செய்வது, 12டி படிவத்தினை பயன்படுத்தி முதியவர;கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்த படியே வாக்களிக்க செய்வது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி பேசினார்.