திருவில்லிபுத்தூரில் பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்

திருவில்லிபுத்தூர், ஏப். 3: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்.6ம் ேததி நடைபெற உள்ளது. இதற்காக பூத் சிலிப் வழங்கும் பணி திருவில்லிபுத்தூரில் துவங்கியது.  தேர்தல் அதிகாரி முருகன் இப்பணியை துவக்கி வைத்தார். கந்தாடை தெரு, நாடகசாலை தெரு, பெரியகடை பஜார் பகுதிகளில் பூத் சிலிப்பு வழங்கும் பணியையும் அவர் பார்வையிட்டார். அனைவருக்கும் பூத் சிலிப் வழங்கும் பணி ஒரு சில தினங்களில் நிறைவு பெறும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: