தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சோழவந்தான், ஏப்.3: சோழவந்தானில் தலித் டிரஸ்ட் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு டிரஸ்ட் நிறுவனர் முனைவர் பாலு தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ருக்குமணி முன்னிலை வகித்தார். அமைப்பாளர் பாப்பாயி வரவேற்றார். இதையடுத்து வரும் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றவும், வாக்குச் சாவடியில் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பாளர் தனலெட்சுமி நன்றி கூறினார்

Related Stories: