கோவை, ஏப்.3: கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் நேற்று காலை குறிச்சி உப்பிலித்திட்டு, வெங்கடாசலபதி நகர், பிள்ளையார்புரம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:குறிச்சி பகுதியில் நகர்மன்ற தலைவராக இரண்டு முறை இருந்துள்ளேன். அப்போது செய்த நலத்திட்டங்களை காட்டிலும் எம்எல்ஏ ஆனால் அதிக அளவில் நலத்திட்டங்கள் செய்ய முடியும். திமுக ஆட்சி அமைந்ததும் கிணத்துக்கடவு தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும். 100 நாட்களில் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.