கோவை, ஏப்.3: சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மசக்காளிபாளையம், ஹோப் காலேஜ் சாலை, பாலன் நகர், ரங்கசாமி லே அவுட், சங்கர் லே அவுட், பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டவர், சிறு குறு தொழிற்கூடங்களுக்குள் சென்று, தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: மழைநீர் வடிகால் அமைக்கவும், பாதாள சாக்கடை அமைக்கவும் திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் அப்பணிகளை ஆமை வேகத்தில் அதிமுகவினர் செய்தனர். இப்போது உள்ள இந்த மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுநீர் செல்கிறது.