சாத்தூர் தொகுதியில் ராஜவர்மனை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பிரசாரம்

சாத்தூர், ஏப்.2:  சாத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் ராஜவர்மனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். சாத்தூர் தொகுதிக்குட்பட்ட  முக்குராந்தல் பகுதியில் வாக்குசேகரித்து டி.டி.வி.தினகரன் பேசியதாவது: தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி துரோக ஆட்சி என்பதால் ராஜவர்மன் நம்மிடம் வந்துவிட்டார். அமைச்சர் பதவிக்கு ஒரு மாண்பு உள்ளது. ஆனால், இங்குள்ள ஒரு அமைச்சர் சண்டியர் போல பேசுகிறார். சண்டைகாரர் மாதிரி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அது பிடிக்காமல் தான் ராஜவர்மன் அமமுக வந்தார். இது அமைச்சருக்கு பிடிக்கவில்லை யாருக்கும் ஒரு புகழ் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார். சிவகாசியின் மகன் என்றவர் ஏன் ராஜபாளைத்தில் நிற்கிறார்? சாத்தூர் தொகுதி முதல் தமிழ்நாடு முழுவதும் இவர்களின் கதையை முடித்து விடுங்கள். தூரோகத்திற்கு பாடம் புகட்ட வேண்டியது மக்கள் பொறுப்பு. அரசு கஜானாவை முதல்வர் பழனிசாமி சுத்தமாக காலி செய்து விட்டார். 6 லட்சம் கோடி வரை கடன்.அனைத்து தரப்பு மக்களும் தவியாய் தவிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: