வேலூர், ஏப்.2:வேலூர் அருகே சிறுமியை கடத்திய கூலிதொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். வேலுார் சேர்ந்தவர் 16வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம்வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், செதுவாலையைச் சேர்ந்தவர் முபாரக் அலி(22) கூலித்தொழிலாளி. இருவருக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து முபாரக் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 30ம்தேதி ஆந்திர மாநிலத்துக்கு அவரை கடத்தி சென்றார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் சப்–-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் தலைமறைவான முபாரக்யை தேடிவந்தனர். சிறுமிக்கு இன்னும் திருமணம் வயது ஆகவில்லை.