திருவாரூர், ஏப்.1: நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் காமராஜ் நேற்று தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் கீழவிடையல், மேலவிடையல், சித்தன்வாழூர், கண்டியூர், தொழுதூர், பாடகச்சேரி, விருப்பாட்சிபுரம், ஆதிச்சமங்கலம் மற்றும் வலங்கைமான் பேரூராட்சியில் லாயம், வளையமாபுரம், கடைத்தெரு, அக்ரஹாரம், கள்ளர் தெரு, கோவில்பத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
கீழவிடையல் எனும் இடத்தில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தபோது அங்கிருந்த பெண்களும், சிறுவர்களும் அமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். கீழவிடையலில் ஒரு பெண் குழந்தைக்கு ஜெயசக்தி என்றும், மேலவிடையலில் ஒரு ஆண் குழந்தைக்கு ஜெயசேகரன் என்றும் பெயர் வைத்தார். அப்போது, அதிமுக மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் ஆதிதிராவிட மக்கள் வாங்கிய தாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும்.