மவுண்ட் சீயோன் செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை, ஏப். 1: புதுக்கோட்டையில் உள்ள மவுண்ட் சீயோன் செவிலியர் கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பாஸ்டர் சாம்சன் ஜேக்கப் திருமறை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜாஸ்மின் ஷீலா வரவேற்றார்.

மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜெய்சன் ஜெயபரதன் புதிதாக பட்டம் பெற்ற மாணவர்களின் பொறுப்புகளை எடுத்துரைத்தார். மவுண்ட் சீயோன் சில்வர் ஜூப்லி பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ஜெய்சன் வாழ்த்துரை வழங்கினார். இந்தாண்டு 44 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

மேலும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் யோவன்னா, பட்டம் பெற்ற செவிலியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதிமொழி எடுக்க உதவினார். மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் ஜான், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இறைஆசி வேண்டி பிராத்தித்தார். இணை பேராசிரியர் சத்தியா நன்றி கூறினார்.

Related Stories: