ஹோலி கொண்டாடிய துணை ராணுவத்தினர்

தொண்டி, மார்ச் 31:சட்டமன்ற தேர்தலில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க துணை ராணுவ படையினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளை சுனாமி பேரிடர் மீட்பு கட்டிடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஹோலி பண்டிகையை கொண்டாடினர். உயரதிகாரிகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு ஆடி, பாடி கொண்டாடினர். இதில் ராணுவ உயர் அதிகாரி பல் ஜிலால் ஜாட், உதய்வீர் சிங், திருவாடனை டிஎஸ்பி ராமகிருஷ்ணன், தொண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தநாதன் உட்பட துணை ராணுவத்தினர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: