Calendarவிழிப்புணர்வு கருத்தரங்கு

திண்டுக்கல், மார்ச் 31: திண்டுக்கல்லில் தனியார் கிளினிக்கில் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தில் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. டாக்டர் முரளிதரன் தலைமை வகித்து பேசுகையில், ‘சர்க்கரை நோயாளிகள் 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் வகை நோயாளிகள் 6 மாத குழந்தை முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்களும், இரண்டாம் வகை நோயாளிகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆவர். இவர்கள் ஆயுட்காலம் முழுவதும் இன்சுலின் பயன்படுத்தியே வாழ வேண்டும். இதை முறையாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நலமுடன் இருக்க முடியும்’ என்றார்.

Related Stories: