ஒட்டன்சத்திரம், மார்ச் 31:ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி பஸ்நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்திக் தலைமையில் போலீசார் முருகேசன், மாரியப்பன் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது தாராபுரத்தில் இருந்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த வாகனத்தில் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக ரூ.25 லட்சத்தை கொண்டு சென்றனர். வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த அதிகாரிகள், உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, ஒட்டன்சத்திரம் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் சசியிடம் ஒப்படைத்தனர். அவர் அதை கருவூலத்தில் ஒப்படைத்தார்.