நாகை, மார்ச் 31: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,861 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 35 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நாகை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதை கலெக்டர் பிரவீன்பிநாயர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.