எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து மீ.அ.வைத்தியலிங்கம் வாக்கு சேகரிப்பு

தாம்பரம், மார்ச் 30: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து திமுக தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம் மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட நூத்தஞ்சேரி பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது எஸ்.ஆர்.ராஜா மக்கள் மத்தியில் பேசுகையில், ‘மாடம்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்துள்ளேன். ரேஷன் கடைகள், நூலகம், சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தள்ளேன்.மாடம்பாக்கம் பேரூராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். எனவே மீண்டும் இதுபோல பல வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டு, மக்களின் தற்போதைய கோரிக்கையான பாதாள சாக்கடை திட்ட பணிகள், நவீன சுடுகாடு, குளங்கள் சீரமைப்பு, பூங்காக்கள் நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்து, தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட பொதுமக்கள் அனைவரும் உதவிட வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின்போது, மாடம்பாக்கம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், கழக பேரூர் செயலாளருமான அரிமா நடராஜன் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: