காஞ்சிபுரம், மார்ச் 30: காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் வக்கீல் எழிலரசன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாவூர், களியனூர், செட்டியார்பேட்டை, வேடல் உள்ளிட்டசுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இந்தப் பிரசாரத்தை காஞ்சிபுரம் தொகுதி எம்பி சிறுவேடல் ஜி.செல்வம் தொடங்கி வைத்தார். அப்போது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளை சந்தித்த வேட்பாளர் வக்கீல் எழிலரசன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும், விவசாயிகள் நலன்காக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எண்று தெரிவித்தார்.