கடலூர், மார்ச் 30: ஒடிசாவில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகினர், இவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செந்தில்நாதன் (46) மீன் லாரி டிரைவர். கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்தழகன் மகன் மதன்குமார்(37). லைன் தெருவை சேர்ந்தவர் சாம்ராஜ் மகன் லெனின்(42) இவரும் செல்லங்குப்பம் மீன் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். 3 பேரும் கடலூரில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு மீன் ஏற்றும் லாரியில் சென்றனர். செந்தில்நாதன் லாரியை பின்பக்கமாக இயக்கியபோது அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் செந்தில்நாதன், மதன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லெனின் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.