சாயல்குடி, மார்ச் 29: பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி வாக்குறுதியளித்தார். முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி நேற்று சாயல்குடி ஒன்றியத்திலுள்ள கடற்கரை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். நரிப்பையூர், வேலாயுதபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இப்பகுதி மக்களின் முக்கிய உற்பத்தி பொருளான பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நேரடியாக கொள்முதல் செய்யப்படும். பனைமர தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி, காப்பீடு, பெண்களுக்கு பனை பொருள் உற்பத்தி பயிற்சி மையம் ஏற்பாடு செய்யப்படும்.