மன்னார்குடி, மார்ச் 26: உலக தண்ணீர் தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விவசாய இடுபொருள் கண்காட்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடந்தது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி என்என்எஸ் மற்றும் நீடாமங்கலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஐசிஏஆர் கிரீஷ் விக்யான் கேந்திரா இணைந்து உலக தண்ணீர் தின கருத்தரங்கம் மற்றும் விவசாய இடுபொருள் கண்காட்சி கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடந்தது. பேராசிரியர்கள் ரவி, கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.