தோகைமலை: குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாணிக்கம், தோகைமலை மேற்கு ஒன்றிய பகுதிகளான சின்னையம்பாளையம், கழுகூர், கூடலூர், கள்ளை ஆகிய ஊராட்சிகளில் உள்ள 73 கிராமங்களுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் மாணிக்கம் பேசும்போது:
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடலூர் ஊராட்சியை மையப்படுத்தி பேரூர் உடையாபட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கவும், கழுகூர், கூடலூர் ஏரிகளுக்கு காவிரி உபரி நீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.