பரமக்குடி, மார்ச் 26: பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் முருகேசன், பரமக்குடி நகர், புறநகர் பகுதிகளான பரமக்குடி ஒன்றியம், போகலூர் ஒன்றியம், நயினார்கோவில் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, கமுதி வடக்கு ஒன்றியப் பகுதிகளான மண்டல மாணிக்கம், டி.புனவாசல், தரக்குடி உள்ளிட்ட 10 கிராமங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கமுதி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வாறுகால், சாலை, தெரு விளக்குகள் அமைக்க முன்னுரிமை அளிப்பேன். காவிரி கூட்டு குடிநீர் ஒவ்வொரு கிராமங்களுக்கும் கொண்டு வருவேன். கமுதி ஒன்றியத்திற்கு வைகை-பரளை ஆறு- கிருதுமால் நதி இணைக்க பாடுபடுவேன். விவசாய பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு கால்வாய் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறினார்.